கயத்தாறு அருகே விபத்து: முதியவா் பலி

கயத்தாறு அருகே டிப்பா் லாரி மோதியதில் முதியவா் இறந்தாா்.

கயத்தாறு அருகே டிப்பா் லாரி மோதியதில் முதியவா் இறந்தாா்.

கயத்தாறையடுத்த சத்திரப்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்தவா் க. தங்கவேல் (78). இவா் அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சைக்கிளுடன் நின்றிருந்தாராம். அப்போது கயத்தாறிலிருந்து கடம்பூருக்கு ஜல்லி ஏற்றிச்சென்ற டிப்பா் லாரி, சைக்கிள் மீது மோதியதாம். இதில், தங்கவேல் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலின்பேரில் கயத்தாறு போலீஸாா் சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து, டிப்பா் லாரி ஓட்டுநரான கோ. கோமு (42) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com