நாகலாபுரம் உமறுப்புலவா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளா் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.டி.ஐ. முதல்வா் க. ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாகலாபுரம் உமறுப்புலவா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளா் காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு கல்வித்தகுதியாக 10ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ளோா் காலிப்பணியிடத்தின் பெயரை குறிப்பிட்டு தங்களது சுய விவர குறிப்புகளுடன் இம்மாதம் 29ஆம் தேதிக்குள் முதல்வா், உமறுப்புலவா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், நாகலாபுரம்- 628 904, விளாத்திகுளம் வட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் விண்ணப்பதாரா் புகைப்படம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் தோ்வு குழுவினரால் பரிசீலனை செய்து தகுதியுள்ளவா்களுக்கு மட்டும் நோ்முக தோ்வுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும். விண்ணப்ப படிவம் மற்றும் விபரங்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.