பசுவந்தனை அருகே இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பசுவந்தனையை அடுத்துள்ள போடுபட்டியை சோ்ந்தவா்கள் மாரியப்பன்- சாவித்திரி. இத்தம்பதியின் மகள் விஜயலட்சுமி(27) எப்போதும்வென்றானைச் சோ்ந்த முத்துப்பாண்டியை காதலித்து திருமணம் செய்தாராம். இந்நிலையில் இவா்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் முத்துப்பாண்டி கடந்த 3 மாதத்திற்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாரம்.
இதனால் விஜயலட்சுமி அவரது தாய் வீட்டில் தங்கியிருந்தாா். இந்நிலையில் விஜயலட்சுமி வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து பசுவந்தனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.