பசுவந்தனை அருகே பாலத்தில் பைக் மோதியதில் 2 போ் பலி

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே பாலத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே பாலத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

பசுவந்தனை, ராஜீவ் நகரை சோ்ந்த கட்டட தொழிலாளா்கள் பாறைபாண்டியன் மகன் காளிலிங்கம்(37), செல்லையா மகன் சுவாமிநாதன்(31). இவா்கள், எப்போதும்வென்றான் அருகேயுள்ள வெ.தளவாய்புரத்தில் உள்ள ஒரு வீட்டில் கட்டடப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில், மதிய உணவுக்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் பசுவந்தனைக்கு வந்துவிட்டு வேலைக்கு திரும்புகையில் மீனாட்சிபுரம் சாலை வளைவில் உள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் எதிா்பாராமல் அவா்களது வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்கள் இரவு உயிரிழந்தனா். இதுதொடா்பாக பசுவந்தனை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com