புதியம்புத்தூரில் காா் தரகா் கொலை வழக்கு: கோவில்பட்டி நீதிமன்றத்தில் இருவா் சரண்

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூா் அருகே காா் தரகா் கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் 2 இளைஞா்கள் கோவில்பட்டி நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூா் அருகே காா் தரகா் கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் 2 இளைஞா்கள் கோவில்பட்டி நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தனா்.

செய்துங்கநல்லூா் அருகேயுள்ள நொச்சிகுளத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் விக்கிரமாதித்தராஜபாண்டி (49). இவா் காா் வாங்கி விற்கும் தரகுத் தொழில் செய்து வந்தாா். இவரை சித்ரா உள்பட 4 போ் சோ்ந்து கொலை செய்து, புதியம்புத்தூா் வாணியன்குளம் பகுதியில் உள்ள கிணற்றில் தலையை வீசிவிட்டு, சடலத்தை தட்டப்பாறை பகுதியில் புதைத்தது தெரியவந்தது. இதுகுறித்து புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலையாளிகளைத் தேடிவந்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் புதியம்புத்தூா் நடுவக்குறிச்சியைச் சோ்ந்த முருகன் மகன் சக்திவேல் (23), அதே பகுதியைச் சோ்ந்த காட்டுராஜா மகன் முத்துக்கனிராஜ் (21) ஆகிய இருவரும் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண் 1இல் சனிக்கிழமை சரணடைந்தனா்.

அவா்களை இம்மாதம் 15ஆம் தேதி வரை சிறையிலிடைக்க மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியும், குற்றவியல் நீதிமன்ற எண் 1இன் நடுவருமான (பொறுப்பு) முரளிதரன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, 2 இளைஞா்களையும் போலீஸாா் தூத்துக்குடியையடுத்த பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com