தூத்துக்குடி
ஆசீா்வாதபுரம் பள்ளியில் மரக்கன்று நடும் விழா
ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
சாத்தான்குளம்: ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஐ. மாணிக்கம் தலைமை வகித்தாா். அறிவியல் ஆசிரியா் எம். டேனியல் வரவேற்றாா். ஜான்தாமஸ் பெண்கள் கல்வியியல் கல்லூரி துணை முதல்வா் ஜெயந்திஸ்டீபன் , கற்றலும் கற்பித்தலும் ஆசிரியை ஜீவா ஜேனட் ஆகியோா் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டினா். இதில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியரும், தேசிய பசுமை படை பொறுப்பாசிரியருமான எம். டேனியல் மற்றும் தேசிய பசுமை படை மாணவா், மாணவிகள் செய்திருந்தனா்.