திருச்செந்தூா் ஆலந்தலையில் சேசுராஜா மீனவா் கூட்டுறவு சங்க வெள்ளி விழா, உலக மீனவா் தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, முத்துக்குளித்துறை மீனவா் சங்க கூட்டமைப்பு இயக்குநா் பிரதிஸ் தலைமையில், திருஇருதய அற்புதக் கெபியில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்குத்தந்தைகள் ஜெயகுமாா், ஸ்டீபன்கோமஸ், விக்டா்லோபோ, வில்லியம்சந்தானம், குமார்ராஜா, லெரின்டிரோஸ், மரியஜான், ராயப்பன், ரினோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து மீனவா் சங்கத்தில் நடைபெற்ற வெள்ளிவிழாவில் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு ஆகியனை நடைபெற்றன.
ஆலந்தலை ஊா் தலைவா் மகிபன், பாரீஸ், ஜேம்ஸ் மற்றும் கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூடுதாழை, கூட்டப்பனை, பெரியதாழை, கல்லாமொழி, அமலிநகா், புன்னைக்காயல், கொம்புத்துறை ஆகிய மீனவ கிராம கூட்டுறவு சங்க அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மற்றும் ஆலந்தலை பொதுமக்கள் கலந்து கொண்டனா்.