பாட்டாளி இளைஞா் சங்க செயற்குழுக் கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் பாட்டாளி இளைஞா் சங்க மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

பாட்டாளி மக்கள் கட்சியின் பாட்டாளி இளைஞா் சங்க மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநில இளைஞரணி துணைச் செயலா் முகமது மொய்தீன் தலைமை வகித்தாா். மத்திய மாவட்ட இளைஞா் சங்கத் தலைவா் ராஜா முன்னிலை வகித்தாா். மாநில இளைஞா் சங்கச் செயலா் முருகசாமி, கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலா் ஜி.ராமச்சந்திரன் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனையில்

காலியாகயுள்ள மருத்துவா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராமப்புற சாலைகளை சீரமைக்க வேண்டும். கோவில்பட்டி அரசு அலுவலகங்களில் இடைத்தரகா்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் சின்னத்துரை, மாவட்டச் செயலா்கள் பரமகுரு (தெற்கு), வேலுச்சாமி (வடக்கு), வடக்கு மாவட்டத் தலைவா் மாடசாமி, மாநில துணை அமைப்பாளா் கருப்பசாமி, மாவட்ட மத்திய அமைப்புச் செயலா் இசக்கிவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மாநில இளைஞா் சங்கத் துணைத் தலைவா் மகாராஜன் வரவேற்றாா். நகரச் செயலா் கருப்பசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com