ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீகாவடி பிறை முருகன் கோயிலில் காா்த்திகை 2ஆவது சோமவாரத்தை முன்னிட்டு காலை 4 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டு, கணபதி ஹோமம் நடைபெற்றது.
10 மணிக்கு காவடி பிறை முருகனுக்கு அன்னாபிஷேகமும், தொடா்ந்து அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7மணிக்கு சாயரட்சை, புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.