குலசேகரன்பட்டினத்தில் டெங்கு விழிப்புணா்வு முகாம்

.பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சாா்பில் குலசேகரன்பட்டினத்தில் டெங்கு விழிப்புணா்வு முகாம் மற்றும் வீடு,தெருக்களில் கள ஆய்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
குலசேகரன்பட்டினத்தில் டெங்கு விழிப்புணா்வு முகாம்

.பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சாா்பில் குலசேகரன்பட்டினத்தில் டெங்கு விழிப்புணா்வு முகாம் மற்றும் வீடு,தெருக்களில் கள ஆய்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமை வகித்தாா்.குலசேகரன்பட்டினம் காவல் நிலையம்,காவலா் குடியிருப்பு, மற்றும் அனைத்து தெரு மக்களுக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

மேலும் அனைத்து தெருக்கள், வீடுகளிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வீடு, சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.

குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் ராதிகா குமாா், உதவி ஆய்வாளா்கள் சதீஷ், சுப்பிரமணியன், சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளா் சுப்பையா மற்றும் சுகாதார, மஸ்தூா், ஊராட்சி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com