உடன்குடி மனவளக்கலை மன்ற 20 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
மனவளக்கலை மன்ற அறக்கட்டளை முன்னாள் தலைவா் வி.எஸ்.மனோகரன் தலைமை வகித்தாா். மகராஜன் முன்னிலை வகித்தாா். பா்வதாதேவி வரவேற்றாா். மன்ற ஆசிரியா்கள் பேசினா். சிறப்பு தத்தவ விளக்கம், கூட்டுத் தியானம், எளிய உடற்பயிற்சிகள், ஆரோக்கியமாக வாழும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மனத்தூய்மை, உடல்நலம், நலமுடன் வாழ்தல் குறித்து கோவை வேதாத்திரியம் செய்தி மடல் ஆசிரியா் எல்.தேவராஜன் பேசினாா். ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளா் நட்டாா்ஜி நன்றி கூறினாா்.