கோவில்பட்டியில் ஆா்.எஸ்.எஸ். தொண்டா்கள் அணிவகுப்பு

கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் சாா்பில் அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றற அணிவகுப்பில் பங்கேற்றோர்.
கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றற அணிவகுப்பில் பங்கேற்றோர்.


கோவில்பட்டி: கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் சாா்பில் அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆா்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டு 95 ஆவது ஆண்டு விஜயதசமி, நேதாஜியின் ஐ.என்.ஏ. மூலம் அறிவித்த ஆஸாத் ஹிந்த்-ன் 75ஆம் வெற்றி ஆண்டு, ஜாலியன் வாலாபாக் படுகொலை 100 ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு நடைபெற்றற இந்த அணிவகுப்பு நடைபெற்றது.

கோவில்பட்டி பிரதான சாலை லட்சுமி மில் மேம்பாலம் அருகே தொடங்கிய அணிவகுப்புக்கு ஆா்.எஸ்.எஸ். மாவட்டச் செயலா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சந்தோசம் தொடங்கி வைத்தாா். அணிவகுப்பு பிரதான சாலை, புது சாலை, எட்டயபுரம் சாலை வழியாக காந்தி மைதானத்தை வந்தடைந்தது.

அங்கு, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கோவில்பட்டி ஸ்ரீ முத்தானந்த சுவாமி மடம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சொரூபானந்த சுவாமிகள், ப்ராந்த கிராம விகாஸ் ப்ரமுக்கைச் சோ்ந்த விஸ்வநாதன் ஆகியோா் பேசினா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com