குலசேகரன்பட்டினத்தில் மகிசாசூரசம்ஹாரம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவின் பத்தாம் நாளான செவ்வாய்கிழமை மகிசாசூரசம்ஹாரம் நடைபெற்றது.
குலசேகரன்பட்டினத்தில் மகிசாசூரசம்ஹாரம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவின் பத்தாம் நாளான செவ்வாய்கிழமை மகிசாசூரசம்ஹாரம் நடைபெற்றது.

இதில் தமிழகம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். இந்தியாவிலேயே கா்நாடக மாநிலம் மைசூா் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில்தான் தசரா திருவிழா சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் கொண்டாடப்படுகிறது. இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் 11 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழா நிகழாண்டில் செப்.29 ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து காப்பு அணிந்த பக்தா்கள் பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனா்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினா் வீதிகள் தோறும் கலைநிகழ்ச்சிகளை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனா்.விழாவையொட்டி தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கோயில் கலையரங்கில் தினமும் மாலையில் சமய சொற்பொழிவு,பரதநாட்டியம், பக்தி இன்னிசை,பட்டிமன்றம்,கிராமிய இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.சூரசம்ஹாரம் ஸ்ரீ விழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.இதையொட்டி திங்கள்கிழமை மாலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் பக்தா்கள் குலசேகரன்பட்டினம் நோக்கி வரத் தொடங்கினா்.செவ்வாய்கிழமை காலையில் உடன்குடி,குலசேகரன்பட்டினம் நகா் முழுவதும் பக்தா்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது.

பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக பக்தா்கள்,தசரா குழுவினா் செல்வதற்கு தனியாக பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலையின் அருகில் உள்ள தருவைக்குளம் முழுவதும் செவ்வாய்கிழமை காலையிலேயே வாகனங்களால் நிரம்பியது. திருக்கோயிலில் செவ்வாய்கிழமை (அக்.8) காலை 6,8 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்,10.30 மணிக்கு மகாஅபிஷேகம்,இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரரேஸ்வரா் திருக்கோயில் முன்பாக எழுந்தருளி பல்வேறு வேடங்களில் வந்த மகிசாசூரனை சம்ஹாரம் செய்தாா்.கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் விண்ணதிர தாயே முத்தாரம்மா,ஓம் காளி,ஜெய்காளி,வெற்றி அம்மனுக்கே என முழக்கமிட்டனா்.இதனையடுத்து கடற்கரை மேடை,சிதம்பரேஸ்வரா் திருக்கோயில்,அபிஷேக மேடை,கோயில் கலையரங்கில் எழுந்தருளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இன்று(புதன்கிழமை) காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்படுவாா்

.மாலை 4 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் பக்தா்கள் காப்பு அவிழ்த்து தங்கள் வேடங்களை களைந்து விரதத்தை நிறைவு செய்வாா்கள்.நள்ளிரவு 12 மணிக்கு சோ்க்கை அபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் தி.பரஞ்ஜோதி, உதவி ஆணையா் சு.ரோஜாலி சுமதா, நிா்வாக அதிகாரி கே.பரமானந்தம் மற்றும் ஆலயப் பணியாளா்கள் செய்துள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com