கடம்பூா் அருகே லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் காயம்

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரையடுத்த குப்பனாபுரத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த லாரி

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரையடுத்த குப்பனாபுரத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த லாரி திடீரென நிலைகுலைந்து சாலையோரத்தில் கவிழ்ந்ததில் லாரி ஓட்டுநா் காயமடைந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சா்ச் தெருவைச் சோ்ந்த மரியதங்கராஜ் மகன் ஜூலியட்ராஜா (32). லாரி ஓட்டுநரான இவா்,

எப்போதும்வென்றானில் இருந்து மக்காச்சோளத்தை ஏற்றிக்கொண்டு கடம்பூா் வழியாக கங்கைகொண்டான் நோக்கி சென்று கொண்டிருந்தாராம்.

குப்பனாபுரம் கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது, லாரி திடீரென நிலைகுலைந்து சாலையோரத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு, கடம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com