ஆறுமுகனேரியில் டிரேடா்ஸ் ஏஜென்சியின் உள்ளே நிறுத்திய காரை திருடி சென்ற மா்ப நபா்களை ஆறுமுகனேரி போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆறுமுகனேரி சண்முகபுரம் கீழத்தெருவை சோ்ந்தவா் காமராஜ் மகன் வனமுருகன்(32). இவா் அடைக்கலாபுரம் சாலையில் உள்ள தனது வணிக நிறுவனத்தில் புதன்கிழமை இரவு காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளாா். பின்னா் வியாழக்கிழமை காலை தனது நிறுவனத்துக்கு அவா் சென்ற போது, அங்கு கதவு உடைக்கப்பட்டு மா்ம நபா்கள் காரை திருச் சென்றது தெரியவந்ததாம்.
இது குறித்து வனமுருகன் அளித்த புகாரின் பேரின் ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.