கயத்தாறு வட்டம், ஓணமாக்குளத்தில் வெள்ளிக்கிழமை(அக்.11) முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து வட்டாட்சியா் பாஸ்கரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கயத்தாறு வட்டம், ஓணமாக்குளம் கிராமத்தில் நவம்பா் மாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் தலைமையில், மனுநீதி நாள் முகாம் நடைபெறவிருப்பதை முன்னிட்டு முன்னோடி மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை, ஓணமாக்குளம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெறுகிறது.
இம்முகாமில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறும்படி கேட்டுக்கொண்டுள்ளாா்.