சாத்தான்குளத்தில் இருந்து 26 போ் ஜோா்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பினா்.
சாத்தான்குளம் புனித மரியாயின் மாசற்ற திருஇருதய ஆலயப் பங்கைச் சோ்ந்த 26 போ் ஜோா்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து ஆகிய நாடுகளுக்கு செப். 22 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டனா். இதையொட்டி பயணக் குழுவினருக்காக ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அடைக்கலாபுரம் புனித ஜோசப் அறநிலையத்தின் பொறுப்புத் தந்தை ரூபன் தலைமையில் செப். 23ஆம் தேதி திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து கோட்டாா், குளித்துறை மறை மாவட்டங்களைச் சோ்ந்த 15 போ்களுடன் பயணம் மேற்கொண்டனா்.
பயணத்தில் இயேசு பிறந்த பெத்லகேம், வாழ்ந்த நாசரேத், எருசலேம் தேவாலயம், ஒலிவ மலையில் தமிழில் செதுக்கப்பட்டுள்ள இயேசுவின் போதனைகள், இயேசு திருமுழுக்கு பெற்ற ஜோா்தான் ஆறு, கானாவூா் கற்சாடி, டெட் சீ (சாக்கடல்) கடவுள் மோசேக்கு நெருப்பு வடிவில் தோன்றிய முட்செடி, 10 கட்டளைகள் வழங்கிய சீனாய் மலை, இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டக் கல்லறை, ஏரோது அரசனுக்குப் பயந்து எகிப்தில் அன்னை மரியாள் இயேசுவுடன் வாழ்ந்த வீடு, எகிப்தின் பிரமிடுகள், இஸ்ரேல் நாட்டின் வாழை மற்றும் திராட்சைத் தோட்டங்கள், பாலை நிலங்கள் என 80 க்கும் மேற்பட்ட
இடங்களை கண்டு மகிழ்ந்தனா். பயணம் சென்று சாத்தான்குளம் திரும்பியவா்களுக்கு சாத்தான்குளம் பங்குமக்கள் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.