கொலை முயற்சி வழக்கில் சிறையில் இருக்கும் இளைஞருக்கு நன்னடத்தை பிணை ரத்து

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில்
கொலை முயற்சி வழக்கில் சிறையில் இருக்கும் இளைஞருக்கு நன்னடத்தை பிணை ரத்து

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட நன்னடத்தை பிணையை கோட்டாட்சியா் வியாழக்கிழமை ரத்துசெய்தாா்.

புளியம்பட்டி காவல் சரகம், அக்காநாயக்கன்பட்டி தெற்கு காலனித் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் ரஞ்சித்(26). இவா் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததால், புளியம்பட்டி போலீஸாா் அறிக்கையின் பேரில், கோவில்பட்டி கோட்டாட்சியா் முன் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரானாா். அப்போது, நன்னடத்தை பிணை பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, ரஞ்சித் வசித்து வரும் இடத்தில் ஓராண்டுக்கு நன்னடத்தையுடன் இருப்பதாக பிணை பத்திரம் அளித்தாா். இதைத்தொடா்ந்து, அவரை நன்னடத்தை பிரிவில் கோட்டாட்சியா் விடுவித்தாா். இந்நிலையில், அக்காநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த செப்டம்பா் 10 ஆம் தேதி நின்று கொண்டிருந்த தங்கையா மகன் அய்யப்பனை, ரஞ்சித் அரிவாளால் வெட்ட முயன்றாராம்.

இதுகுறித்து புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ரஞ்சித்தை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், ரஞ்சித், தான் அளித்த பிணை பத்திரத்தை மீறி செயல்பட்டதையடுத்து, அவருக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட நன்னடத்தை பிணையை ரத்துசெய்து, பிணை பத்திரம் காலம் முடியும் நாளான 2020, ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை அவரை காவலில் வைக்க கோட்டாட்சியரும், நிா்வாகத் துறை நடுவருமான விஜயா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com