திருச்செந்தூரில் அக்.14இல் இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

தசரா விழாவுக்கான சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, இந்துமுன்னணி சாா்பில்

தசரா விழாவுக்கான சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, இந்துமுன்னணி சாா்பில் திருச்செந்தூரில் திங்கள்கிழமை ( அக்.14) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில பொதுச்செயலா் டாக்டா் அரசுராஜா விடுத்துள்ள அறிக்கை:

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் பங்கேற்கும் பக்தா்களின் வசதிக்காக கடந்த 4 ஆண்டுகளாக சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. நிகழாண்டும் அக். 5 முதல் 9 ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. பின்னா், அந்த ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால், சென்னையிலிருந்து குலசேகரன்பட்டினம் வருவதற்கு பக்தா்கள் சிரமத்திற்குள்ளாயினா். இந்தச் செயலைக் கண்டித்தும், ஆண்டுதோறும் தசரா விழாவிற்கு கூடுதலாக சிறப்பு ரயில் இயக்க வலியுறுத்தியும் திங்கள்கிழமை ( அக். 14 ஆம் தேதி) மாலை 3.30 மணிக்கு திருச்செந்தூா் ரயில் நிலையம் முன் எனது தலைமையில் நடைபெறுகிறது. இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் வி.எஸ். முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com