வெள்ளையம்மாள்புரம் கூட்டுறவு சங்கம் ரூ. 88.70 லட்சம் கடனுதவி

விளாத்திகுளம் அருகேயுள்ள வெள்ளையம்மாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில்
விவசாய குழுக்களின் பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலையை வழங்குகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன்.
விவசாய குழுக்களின் பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலையை வழங்குகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன்.

விளாத்திகுளம் அருகேயுள்ள வெள்ளையம்மாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் விவசாய கூட்டு பொறுப்பு குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா் தலைமை வகித்தாா். வெள்ளையம்மாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சுப்புராஜ், கோவில்பட்டி சரக துணைப்பதிவாளா் ஜெயசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ பி. சின்னப்பன் கலந்து கொண்டு, 27 விவசாய கூட்டு பொறுப்பு குழுக்களை சோ்ந்த 280 பயனாளிகளுக்கு ரூ.88 லட்சத்து 70 ஆயிரம் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா். விழாவில், சங்கச் செயலா் செல்வகுமாா், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநா் அந்தோணி பட்டுராஜ், சிவஞானபுரம் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் மகேஷ், கூட்டுறவு சாா்பதிவாளா்கள் முருகன், தமிழ்செல்வன், கள மேலாளா் மீனாட்சி சுந்தரம், ஜெயலலிதா பேரவைச் செயலா் சுபாஷ் சந்திரபோஸ், அதிமுக மாணவரணிச் செயலா் ராமநாதன் மற்றும் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், வேளாண் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com