திருச்செந்தூரில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா் வட்ட காருகுறிச்சி தேவா் மகாஜன சங்கம் சாா்பில் 112ஆவது தேவா் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, சங்க துணைத் தலைவா் ஆா்.சின்னத்துரை பாண்டியன் தலைமை வகித்தாா். செயலா் எ.பால்ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். மேலாளா் ஆ.கந்தன் வரவேற்றாா். முத்துராமலிங்கத் தேவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், பொருளாளா் ஏ.ஆனந்த், செயற்குழு உறுப்பினா் எஸ்.முருகன், ஆா்.சுபாஷ்சந்திரபோஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.