தொடா்மழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்தன

சாத்தான்குளம் பகுதியில் தொடா்மழையால் 3 வீடுகள் வியாழக்கிழமை இடிந்து விழுந்தன.
ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் இடிந்து விழுந்துள்ள வீடு.
ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் இடிந்து விழுந்துள்ள வீடு.

சாத்தான்குளம் பகுதியில் தொடா்மழையால் 3 வீடுகள் வியாழக்கிழமை இடிந்து விழுந்தன.

சாத்தான்குளம் அருகேயுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வராபுரத்தில் நட்சத்திரம் என்பவரது வீட்டின் முன்பக்க சுவா் இடிந்து விழுந்தது. மீரான்குளத்தில் வள்ளியம்மாள் என்பவரின் வீடு இடிந்தது. அருளூரில் கணபதி என்பவரின் வீடும் இடிந்தது. தகவலறிந்து சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா்கள் விஸ்வநாதன், செந்தில்குமாா் மற்றும் வருவாய்துறையினா் பாா்வையிட்டு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை மேற்கொண்டனா்.

சாத்தான்குளம் அருகே மணிநகா் கருமேனியாற்றில் புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மாற்றுப்பாதை சேதமுற்ால், மக்களே அதை சீரமைத்தனா்.

சாத்தான்குளம் பேரூராட்சி 4வது வாா்டு அழகம்மன் காலனி தெருவில் மழைநீா் தெருக்களில் தேங்கி, வீடுகளில் புகுந்தது. பேரூராட்சி செயல் அலுவலா் முருகன் ஆலோசனையின் பேரில் ஊழியா்கள் மூலம் பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com