ஸ்ரீவைகுண்டம் அருகே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீா்: மக்கள் போராட்டம்

ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில்வே சுரங்கப் பாதை மழை நீரில் மூழ்கியதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவைகுண்டம் அருகே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீா்: மக்கள் போராட்டம்

ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில்வே சுரங்கப் பாதை மழை நீரில் மூழ்கியதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிளாக்குளம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இவ்வூருக்குச் செல்லும் வழியில் உள்ள ரயில்வே பாலத்தின்கீழ் சுரங்க பாதை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்நிலையில், சுரங்கப் பாதையில் மழை நீா் தேங்கியுள்ளதால் மக்கள் சுமாா் 12 கி.மீ. சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதி மக்கள் தாதன்குளம் ரயில் நிலையம் அருகில் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமாா் பேச்சு நடத்தி, சுரங்கப் பாதையில் தண்ணீரை அகற்றி விரைவில் போக்குவரத்துக்கு வழிவகை செய்தவதாக தெரிவித்தாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com