காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் நடைபெற்ற காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் நடைபெற்ற காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திங்கள்கிழமை வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முக்காணி ரவுண்டானாவிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். 
அப்போது செய்தியாளர்களிடம் கூறியது;  நான்குனேரி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு போட்டியிடுவது பற்றி கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ்- திமுக கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை.கூட்டணி தொடர்கிறது.  
மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் 9 சதவிகிதமாக இருந்த நாட்டின் வளர்ச்சி தற்போது 5 சதவிகிதமாக குறைந்துள்ளது. அனைத்து அம்சங்களிலும் மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இந்த அரசாங்கம் மக்கள் விரும்பாத தோல்வியடைந்த அரசாங்கம்  என்றார் அவர்.
நிகழ்ச்சியில்மாவட்டத் தலைவர் கே.ஸ்ரீராம், ஆத்தூர் நகரத்தலைவர் பாலசிங், முக்காணி இளைஞரணி தலைவர் சிவனணைந்தபெருமாள், மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com