கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முன்னோக்கு அறிவை மேம்படுத்த தொழில் நுட்ப பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி இயக்குநர் சண்முகவேல் தலைமை வகித்தார். முதல்வர் காளிதாசமுருகவேல் முன்னிலை வகித்தார். சென்னை இன்போசிஸ் நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் காயத்திரி அபர்னா தர்மராஜ் , பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசுகையில், தற்போதைய தொழில் நுட்ப துறையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களையும், அதன் முக்கியத்துவத்தையும் விளக்கி, தொழில் நுட்பத் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.
ஏற்பாடுகளை துறை தலைவர் சீனிவாசகன் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.