தூத்துக்குடி மண்டலத்துக்குள்பட்ட கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் வழக்குகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கூடுதல் பதிவாளர் மீராபாய் தலைமை வகித்தார். பின்னர் கூட்டுறவு சங்கத் தேர்தலின் போது பதிவான வழக்குகள் மற்றும் அவற்றின் நிலை, நிலுவை வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, தூத்துக்குடி மண்டலத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தற்போது 2 வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் அனைத்தும் உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தென் மண்டல விசாரணை குழுவால் முடிவு காணப்பட்டு தேர்தல் நிறைவு பெற்றுள்ளது என்றார்.
ஆய்வின் போது துணைப் பதிவாளர்கள் போ. ரவீந்திரன், ஜெயசீலன், மாரியப்பன், கூட்டுறவு சார்பதிவாளர் மாரிமுத்து, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அந்தோனி பட்டுராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.