திருச்செந்தூர் பகுதியில் வியாழக்கிழமை(செப். 26) மின் தடை செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகனேரி உபமின் நிலையத்தில்அவசரகால பராமரிப்பு பணி காரணமாக புதன்கிழமை (செப்.25) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை வேறு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப். 26) நடைபெறுகிறது. இதன்படி ஆறுமுகனேரி உபமின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் உபமின் நிலையங்களான குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் இருந்து மின்னூட்டம் பெறும் புன்னக்காயல், ஆத்தூர், பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்கோளூர் ஆகிய பகுதிகளுக்கு வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.