தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவர், மாணவிகளின் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஆவணங்கள் திங்கள்கிழமை சரிபார்க்கப்பட்டன.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர் ஒருவர் தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை மீண்டும் சரிபார்க்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
 அதன்அடிப்படையில், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 2019-20 ஆம் கல்வியாண்டில் சேர்ந்த 150 மாணவர்களிடம் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. இருப்பினும் எந்த முறைகேடும் இருந்ததாக கண்டுபிடிக்கப்படவில்லை. அரசு மருத்துவக் கல்லூரி பொறுப்பு முதன்மையர் பாவலன் இந்த பணிகளை பார்வையிட்டார். 
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய இடஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்த 21 பேர் உள்ளிட்ட 150 பேர் முதலாமாண்டு பயின்று வருகின்றனர். 
அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பின்போது நீட் தேர்வு நுழைவுச் சீட்டில் உள்ள புகைப்படம், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் உள்ள ஆவணங்களின் புகைப்படம், மருத்துவக் கல்லூரியில் சேரும்போது 3 துறைகளில் கொடுத்த புகைப்படம், தற்போது அவர்களின் முகம் உள்ளிட்டவை குறித்து சரிபார்க்கப்பட்டது. இந்த சரிபார்ப்பு குறித்த அறிக்கை மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com