திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் 67ஆவது பிறந்த நாளையொட்டி குலசேகரன்பட்டினம் தருவைக்குளத்தில் உடன்குடி ஒன்றிய, நகர திமுக சார்பில் 5 ஆயிரம் பனை விதைகள் நடவுப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
உடன்குடி ஒன்றிய திமுக செயலர் பி.பாலசிங் தலைமை வகித்தார். நகரச் செயலர் ஜான்பாஸ்கர், பரமன்குறிச்சி ஊராட்சி திமுக செயலர் க.இளங்கோ, மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ரவிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன் கலந்துகொண்டு பனை விதைகள் நடவுப் பணியைத் தொடங்கிவைத்தார்.