திருச்செந்தூரில் வீடு இடிந்து விழுந்து இளைஞர் காயம்

திருச்செந்தூரில் வீடு இடிந்து விழுந்ததில் இளைஞர் பலத்த காயமடைந்தார்


திருச்செந்தூரில் வீடு இடிந்து விழுந்ததில் இளைஞர் பலத்த காயமடைந்தார்.
திருச்செந்தூர், வீரமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துஈஸ்வரன் (21). இவரது தந்தை இறந்து விட்டார். தாய் ராமலெட்சுமியுடன் வசித்து வரும் இவர், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கினாராம். சனிக்கிழமை காலையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com