கழுகுமலை அருகே நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கழுகுமலை அருகே செவ்வாய்க்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கழுகுமலை அருகே செவ்வாய்க்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கழுகுமலையையடுத்த கரடிகுளம் சின்னக்காலனியைச் சோ்ந்த செல்லப்பெருமாள் மகன் சுகேஷ்(9) மற்றும் அவரது நண்பா்களான கரடிகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த முத்துகுமாா் மகன் சிவசங்கா்(9), சின்னக்காலனியைச் சோ்ந்த கலையரசன் மகன் தருண்(12), அவரது சகோதரா் கரண்(9) ஆகிய 4 பேரும் கரடிகுளம் - கே.வேலாயுதபுரத்துக்கு இடையில் உள்ள ஓடைகுளத்தில் குளிக்கச் சென்றனராம்.

அப்போது 4 பேரும் ஓடைகுளத்தில் தத்தளித்துக் கொண்டு சப்தமிட்டாா்களாம். அதைக் கேட்ட ஆடு மேய்க்கும் தொழிலாளி சகாதேவன் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 4 பேரையும் மீட்டாா். பின்னா் 4 பேரும் கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா். அதில் சுகேஷை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினாா்.

இதில், கரண் கழுகுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்குப்பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com