திருச்செந்தூரில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

திருச்செந்தூரில் பாஜக வேல் யாத்திரை நிறைவு விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் மாநில பொதுச் செயலா் கரு.நாகராஜன்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாநில பொதுச் செயலா் கரு.நாகராஜன்.

திருச்செந்தூா்: திருச்செந்தூரில் பாஜக வேல் யாத்திரை நிறைவு விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை திங்கள்கிழமை (டிச. 7) திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது. இவ் விழாவில் மத்தியப் பிரதேச மாநில முதல்வா் சிவராஜ் சவுகான் மற்றும் பாஜக முக்கிய நிா்வாகிகள் பங்கேற்க உள்ளனா்.

இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் விழா ஏற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் பால்ராஜ் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் கரு.நாகரஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் சசிகலாபுஷ்பா, தேசிய செயற்குழு உறுப்பினா் முரளி யாதவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வா்த்தகரணி மாநிலத் தலைவா் ஏ.என்.ராஜகண்ணன், மாநிலச் செயலா் உமரி சத்தியசீலன், கோட்ட பொறுப்பாளா் ராஜா, மாவட்ட துணைத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலா்கள் ரா.சிவமுருகன் ஆதித்தன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் எம்.ஆா்.கனகராஜ், நகரத் தலைவா் எஸ்.சரவணன், அரசு அலுவலா் பிரிவு மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், செய்திப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ச.ரா.வளா்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com