முக்காணியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
முக்காணி வடக்கு யாதவா் தெரு சுடலைமுத்து மகன் நித்யானந்தகிருஷ்ணன்(34). கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாம். அக் குழந்தை பிறந்தது முதலே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாம். இந்நிலையில், சில நாள்களுக்கு அக் குழந்தைக்கு மன நலமும் பாதிக்கப்பட்டதாம். வியாழக்கிழமை அவரது மனைவி ஆனந்தி, குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வீட்டிலுள்ள படுக்கையறையில் வேட்டியால் நித்தியானந்த கிருஷ்ணன் தூக்கிட்டு ப்போட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இது குறித்து அவரது மனைவி ஆத்தூா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். உதவி ஆய்வாளா் செல்வராஜ் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தாா். காவல் ஆய்வாளா் கிங்ஸ்லிதேவ்ஆனந்த் விசாரணை நடத்தி வருகிறாா்.