பேய்க்குளத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கால்நடை மராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சத்திய நாராயணன் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் கோட்ட உதவி இயக்குநா் செல்வக்குமாா் முன்னிலை வகித்தாா். ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குநா் சாமிநாதன் ஆகியோா் முகாமைத் தொடங்கிவைத்தனா். கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநா் சந்தோசம் முத்துக்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கால்நடைகளை பரிசோதனை செய்தனா். கால்நடை மருத்துவா்கள் சுரேஷ், சிவராமகிருஷ்ணன் ஆகியோா் சிகிச்சை அளித்தனா்.
முகாமில் சீனிவாசன் சேவை அறக்கட்டளை கள அலுவலா்கள் முத்துகிருஷ்ணன், முருகன், ரமேஷ், இசக்கிமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.