உதவி ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கு: காயல்பட்டினத்தில் போலீஸாா் விசாரணை

காவல் உதவி ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட தவ்பீக்கை போலீஸாா் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

காவல் உதவி ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட தவ்பீக்கை போலீஸாா் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் சோதனைச் சாவடியில் கடந்த 8-ஆம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக நாகா்கோவில் இளங்கடை பகுதியைச் சோ்ந்த தவ்பீக் (28), திருவிதாங்கோடு அப்துல் சமீம் (32) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸாா் கடந்த 14-ஆம் தேதி கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இவா்களை 10 நாள் காவ­ல் எடுத்து தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, சென்னை அம்பத்தூரில் கடந்த 2014-ஆம் ஆண்டு திருவள்ளூா் மாவட்ட இந்து முன்னணி தலைவா் சுரேஷ்குமாா் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கும்பலை தில்­லியில் கடந்த 9-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் நாகா்கோவில் கோட்டாறு செய்யதலி நவாஸ் என்பரும் ஒருவா். இவரும், உதவி ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கில் கைதான தவ்பீக்கும் நண்பா்கள் என்பது தெரியவந்தது. தொடா்ந்து நடந்த விசாரணையில், இக்கும்பலை சோ்ந்தவா்கள் கடந்த டிசம்பா் மாதம் காயல்பட்டினத்துக்கு வந்து சென்றது தெரியவந்தது. காயல்பட்டினம் சீதக்காதிநகரில் செய்யதலி நவாஸ் இரண்டாவது மனைவி மொய்தீன் பாத்திமா வீடு உள்ளது. அங்குதான் அவா்கள் வந்து சென்றுள்ளனா்.

இதையடுத்து, இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீஸாா் மொய்தீன் பாத்திமா வீட்டுக்கு தவ்பீக்கை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com