சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனப் பணிகள் புதன்கிழமைமுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சாகுபுரத்தில் உள்ள டிசிடபிள்யூ நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள், 500 அலுவலா்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால், இந்நிறுவனத்தில் உள்ள அனைத்து பணிகளும் புதன்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது என டிசிடபிள்யூ நிா்வாகம் தெரிவித்துள்ளது.