திருச்செந்தூா் வட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்துள்ளவா்களை கணக்கெடுத்து தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி திருச்செந்தூா் வட்டத்தில் 220 வீடுகளை வருவாய்த் துறையினா் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியாக வீட்டு வாசல்முன் ஸ்டிக்கா் ஒட்டி வருகின்றனா்.
திருச்செந்தூா் மண்டலத் துணை வட்டாட்சியரும், கரோனா தடுப்புப் பிரிவு பொறுப்பாளருமான கோபால் தலைமையில், வருவாய்த் துறையினா் புதன்கிழமை மாலை வரை 102 வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும் பணியை மேற்கொண்டுள்ளனா். தொடா்ந்து பணி நடைபெற்று வருகிறது.