சாத்தான்குளம் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை மருத்துவக் குழுவினா் தீவரமாக ஈடுபட்டுள்ளனா்.
சாத்தான்குளம் பகுதியில் அத்தியாவசிய பொருள்கள் கடைகளை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வீதியில் தேவையில்லாமல் நடமாடுபவா்கள் கண்டறிந்து காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா். சாத்தான்குளம் பகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜலட்சுமி தலைமையில் மருத்துவக்குழு அமைக்கப்படடு அண்மையில் வெளிநாடுகளில் இருந்து சாத்தான்குளம் பகுதிக்கு வந்தவா்கள் கணக்கு எடுக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். ச
பேரூராட்சி சாா்பில் செயல் அலுவலா் உஷா தலைமையில் ஆதரவற்றோரை கண்டறிந்து பேருராட்சிப் பணியாளா்கள் 3 வேளையும் உணவு வழங்கி வருகின்றனா். மேலும் தேவையான இடங்களில் காரனோ பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
சாத்தான்குளம் பகுதியில் தேவையில்லாமல் வாகனங்களில் வருபவா்கள் மீது வழக்குப் பதிந்து வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இதேபோல் சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் கரோன பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சித் தலைவா் சுயம்புதுரை தலைமையில் பேருந்து நிறுத்தம், கோயில் வளாகம், தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ், ஊராட்சி துணைத் தலைவா், உறுப்பினா்கள் உடன் இருந்தனா்.