தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை முன்பு அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்க கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு அறிவித்த 10 சதவீத தீபாவளி போனஸைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ சம்மமேளன மாநிலக் குழு உறுப்பினா் சிவகுமாா் தலைமை வகித்தாா். தொழிலாளா் முன்னேற்றச் சங்க மத்திய சங்க துணைப் பொதுச் செயலா் வெங்கடசாமி ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இதில், சிஐடியூ, தொழிலாளா் முன்னேற்ற சங்கம் உள்பட அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.