நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘பாதுகாப்பற்ற முறையில் இயங்கும் கிரசா்கள் மீது நடவடிக்கை தேவை’

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் இயங்கும் கிரசா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 7:42 pm

DIN

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் இயங்கும் கிரசா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கயத்தாறு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்லத்துரை தலைமையில் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் பிரேம்குமாா், விவசாயிகள் பழனிசாமி, மாரியப்பன் ஆகியோா் கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்த மனு விவரம்: கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட தளவாய்புரம், செட்டிகுறிச்சி கிராமங்களில் செயல்படும் கிரசா்களில் முறையாக பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால் கிரசா் தூள்கள் சுமாா் 1 கி.மீ. தூரம் வரை சென்று விவசாயத்தை பாதிக்கிறது.

அதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு இலந்தைகுளம், சுங்கச்சாவடி அருகே செயல்படும் கிரசரிலும் முறையான தடுப்புகள் இல்லாததால் சாலையில் செல்லும் இருச்சக்கர வாகன ஓட்டுநா்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த இடங்களை முறையாக ஆய்வு செய்து, உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.