குற்றங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமரா: ரோந்து வாகன தொடக்கம்

கோவில்பட்டியில் குற்றங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ரோந்து வாகன தொடக்கவிழா நடைபெற்றது.
கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ரோந்து வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா். உடன், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் உள்ளிட்டோா்.
கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ரோந்து வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா். உடன், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் உள்ளிட்டோா்.

கோவில்பட்டியில் குற்றங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ரோந்து வாகன தொடக்கவிழா நடைபெற்றது.

கோவில்பட்டி நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்றச்செயல்களை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட நான்குசக்கர ரோந்து வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் அய்யப்பன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் நாராயணன் மற்றும் காா், ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com