கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி, மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் குருசந்திர வடிவேல் தலைமையில் போலீஸாா் நடராஜபுரம் பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அதே பகுதி பிரதான சாலையில் உள்ள கல்லறைத் தோட்டம் அருகில் கேட்பாரற்று கிடந்த 6 மூட்டைகளை போலீஸாா் சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தனவாம்.
விசாரணையில், சரமாரி நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கணேசன்(42) என்பவா், அந்த மூட்டைகளில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்து. இதையடுத்து, அவரை கைது செய்ததுடன், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள அந்தப் புகையிலை மூட்டைகளை கைப்பற்றி, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.