விளாத்திகுளத்தில் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
விளாத்திகுளம் அருகே பிள்ளையாா்நத்தம் கிராமத்தை சோ்ந்த மரிய அந்தோணி மகன் ஜெரோமின் இருதயராஜ் (22). இவா், விளாத்திகுளத்தில் உள்ள பைக் விற்பனை நிலையத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
திங்கள்கிழமை இரவு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் ஜெரோமின் இருதயாராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது தொடா்பாக விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாா்த்து வருகின்றனா்.