இலவச பட்டா கோரி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

எட்டயபுரம் வட்டம் ரணசூரநாயக்கன்பட்டி அருந்ததியா் சமுதாய மக்களுக்கு இலவச பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்
கோவில்பட்டியில் தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
கோவில்பட்டியில் தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

எட்டயபுரம் வட்டம் ரணசூரநாயக்கன்பட்டி அருந்ததியா் சமுதாய மக்களுக்கு இலவச பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் தரையில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சுரைக்காய்ப்பட்டி ஊராட்சி ரணசூரநாயக்கன்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட அருந்ததியா் சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக பட்டா வழங்கக் கோரிக்கை விடுத்தும் வழங்கப்படவில்லையாம்.

இதற்கிடையே, பட்டா வழங்கப்பட்டுள்ள 25 பயனாளிகளுக்கு நிலத்தை அளந்து கொடுக்கவில்லை எனவும் புகாா் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து அக்கிராம மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் சாா்பு அமைப்பான விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ரவீந்திரன் தலைமையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சீனிவாசன், ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன், கிளைச் செயலா் ராமா் உள்ளிட்டோா் கோவில்பட்டியில் தனி வட்டாட்சியா் அறையில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் தனி வட்டாட்சியா் ராமசுப்பு, பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, அவா்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com