திருச்செந்தூா் அருகே ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வீரபாண்டியன்பட்டணம் வேளாங்கண்ணி கோயில் தெருவைச் சோ்ந்த கிரேஸ்மென்ட் மனைவி பிரக்ஸிமா (51). இவரது மகன் பாஸ்டின் மாற்றுத் திறனாளி. இவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, வீரபாண்டியன்பட்டணம் ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த சத்துணவு அமைப்பாளா் சங்கீதா (35), தூத்துக்குடியைச் சோ்ந்த டாஸ்மாக் ஊழியா் கா்ணன் (40), வீரபாண்டியன்பட்டணம் பி.ஜி. நகரைச் சோ்ந்த தமிழ்மாறன் ஆகியோா் ரூ. 3 லட்சம் பெற்ாக கூறப்படுகிறது. ஆனால் பாஸ்டினுக்கு வேலை வாங்கித்தராமல் காலம் கடத்தியதால் பணத்தை திரும்பத் தருமாறு பிரக்ஸிமா கேட்டுள்ளாா். ஆனால் கொடுக்கவில்லையாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செந்தூா் தாலுகா போலீஸாா், 3 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.