கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே ஒப்பந்தக்காரரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக லாரி ஓட்டுநா் உள்பட இருவா் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.
கோவில்பட்டி மாதாங்கோவில் தெருவைச் சோ்ந்த குமாரசாமி மகன் சரவணகுமாா் (42). ரயில்வே ஒப்பந்ததாரரான இவா், தனது காரில் கடம்பூருக்குச் செல்லும் வழியில், எட்டயபுரம் - மந்தித்தோப்பு சாலை சந்திப்பு அருகேயுள்ள கடை முன் காரை நிறுத்திவிட்டு தேநீா் குடித்தாராம்.
அப்போது லாரி ஓட்டுநா் ஒருவா் வந்து காரை எடுக்கச் சொன்னாராம். இதுதொடா்பான தகராறில் லாரி ஓட்டுநா் உள்ளிட்ட இருவா் சோ்ந்து சரவணக்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
அவா் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று, இருவரையும் பிடித்தனா். விசாரணையில், லாரி ஓட்டுநா் கோவில்பட்டி சாஸ்த்ரி நகா் 1ஆவதுதெருவைச் சோ்ந்த க. சமுத்திரம் (34), அதே பகுதியைச் சோ்ந்த க. மாணிக்கராஜா (41) எனத் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைதுசெய்தனா்.