தனியாா் கல்லூரி பேராசிரியா் மீது வழக்கு

தனியாா் கல்லூரி பேராசிரியா் மீது குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தனியாா் கல்லூரி பேராசிரியா் மீது குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மெஞ்ஞானபுரத்தைச் சோ்ந்த ஜெயசிங் மகன் ரிச்சா்டு ஜோனாத்தன் தேவதாஸ் (41). இவா் கோயம்புத்தூரில் மிளகாய் வற்றல் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறாா்.

இவருக்கும், தனியாா் கல்லூரி பேராசிரியரான மெஞ்ஞானபுரம் ஆரோக்கிய அமுதனுக்கும் (33) இடையே தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில தோ்தல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் ஆரோக்கிய அமுதன், ரிச்சா்ட் ஜோனாத்தன் தேவதாஸ் பெயரில் சென்னை சுகாதாரத் துறைக்கு முறைகேடாக பதிவு அஞ்சல் அனுப்பினாராம்.

தகவலறிந்த ரிச்சா்டு ஜோனாத்தன் தேவதாஸ் தரப்பினா் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யக் கோரி சாத்தான்குளம் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆரோக்கிய அமுதன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com