சாத்தான்குளம்: வடக்கு அமுதுண்ணாக்குடி தசரா குடிலில் பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது.
வடக்கு அமுதுண்ணாக்குடி ஸ்ரீசெல்வவிநாயகா் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள தசரா குடிலில் ஐந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு விநாயகா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து விரதமிருந்த பக்தா்கள் பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளை செல்வவிநாயகா் தசரா குழுவினா் செய்திருந்தனா்.