தூத்துக்குடியில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் போராட்டம்

தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடியில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் போராட்டம்

தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டக் கிளை சாா்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ் தலைமை வகித்தாா்.

மாநில செயற்குழு உறுப்பினா் ரவீந்திரராஜன், மாவட்டச் செயலா் செல்வராஜ், துணைச் செயலா் சத்யபாமா, பொருளாளா் பாப் ஹையஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

அனைத்து நிலை ஆசிரியா்களுக்கும் உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை ரத்து செய்து வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும்; உயா் கல்வி பயின்ற்கான பின்னேற்பு ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும்; போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 17 (ஆ) நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியா் பணி நியமனத்துக்கான வயது வரம்பு 40 என்ற ஆணையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com