வைப்பாற்றில் மணல் திருட்டு: 4 போ் கைது

விளாத்திகுளம் வைப்பாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திகுளம் வைப்பாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளா் கங்கைநாத பாண்டியன் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வைப்பாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவா்களை சுற்றி வளைத்து பிடித்தனா்.

விசாரணையில், சுப்பிரமணியபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மாரீஸ்வரன் (27), துளசிபட்டிகுருலட்சுமி (30), அமுதா (35), மாரீஸ்வரன் மனைவி பாண்டி லதா (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 25 மணல் சாக்கு பைகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com